
Article by : Admin on 15-06-2025
நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் மனோஜ் கே ஜெயன் ஆகியோருக்கு 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு பெண்குழந்தை பிறந்தது. 2008ஆம் ஆண்டு ஊர்வசியும் மனோஜ் கே ஜெயனும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
ஊர்வசிக்கும் மனோஜ் கே ஜெயனுக்கு பிறந்த பெண் குழந்தையான தேஜ லக்ஷ்மி தற்போது கதாநாயகியாக அறிமுகமாகிறார். மலையாளத்தில் ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற படம் மூலம் அறிமுகமாகுவதாக மனோஜ் கே ஜெயன் செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து அறிவித்தார்.தேஜ லக்ஷ்மி நடிக்கிறேன் என சொன்னவுடன் ஊர்வசியிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வருமாறு சொன்னதாக மனோஜ் கே ஜெயன் கூறினார்.
அறிமுக இயக்குநர் பீனு பீட்டர் கதை எழுதி இயக்கும் சுந்தரியாயவள் ஸ்டெல்லா படத்தில் டைட்டில் ரோலான சுந்தரியாயவள் ஸ்டெல்லா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சர்ஜானோ காலித் நாயகனாக நடிக்கிறார்.இப்படத்தை முகமது சலீ தயாரிக்க ஸ்ரீநாத் சிவசங்கரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது
